38வது சென்னை புத்தகத் திருவிழா – என் பார்வையில்

IMG_20150121_183958697

சென்னையில் இருப்பதற்காக நான் பெருமைபடும் ஒரு காரணம் சென்னை புத்தகக் கண்காட்சி. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BPASI) நடத்திய இந்த 38வது புத்தகக் கண்காட்சி சென்னை, நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஜனவரி 9 முதல் 21 வரை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அனுபவம் . . .

இவ்வாண்டு என்னை கவர்ந்த எழுத்தாளர்: சுஜாதா

என்னை கவர்ந்த பதிப்பகம் :  கிழக்கு பதிப்பகம்

நான் அதிகம் பார்த்த புத்தகம்: பொன்னியின் செல்வன்

என்னை கவர்ந்த புதுவரவு: ஆனந்தவிகடனின் “சிவகாமியின் சபதம்”

எனக்கு புதிதாய் அறிமுகமான ஆசிரியர்கள்:
ஜெயகாந்தன்  – சில நேரங்களில் சில மனிதர்கள்

 தி.ஜானகிராமன் – மோக முள்

வாங்க விரும்பி/ வாங்கமல் வந்த புத்தகம்: திருவரங்கன் உலா

மொத்த புத்தகங்கள்: 30