தொடங்கும் போது புரிவதில்லை
முடியும் போது தெரிவதில்லை
அவை விட்டுச்செல்வதெல்லாம்
காலடிச் சுவடுகள் தான்
கடற்கரையில் அல்ல- காலக்கரையில்!!!
Month: September 2012
உள்ளூர் அகதி
பத்தாம் மாதம்
பெற்ற தாயின் பந்தம் அறுத்தாய்!
ஐந்தாம் அகவையில்
தூக்கி வளர்த்த தந்தையின்
தோளில் உதைத்தாய் !
இருபத்தைந்தாம் வயதில்
நாட்டை வெறுத்தாய் –
காரணம் கேட்டால்
காண்போர் இல்லை என்றாய்!!
மேலை மங்கை மோகம் கொண்டு
தேசம் துறந்தாய் –
உன் அன்னை அதையும் பொறுத்தாள்.
ஈராண்டில் ஒரு முறை
தாயகம் வந்தாய் – ‘விருந்தினனாக’
விரட்டி அடித்தாள் உன்
மனம் கவர்ந்த கண்ணி –
திரும்பி வந்தாய் விட்டுப்போன தாயை எண்ணி
உன் கதறல் கேட்டு
அவளும் தன்னகம் திறந்தாள்
மீண்டும் வாழ்கிறாய்
தாய் மடியில் – ஆனால்
‘அகதியாய்’ உன் உடன் பிறந்தோர் பார்வையில்!